பேருந்தில் போதைப்பொருள் கொடுத்து தங்க நகைகள் கொள்ளை


பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி போதைப்பொருள் கொடுத்து அவர்களிடம் இருந்த தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் இருந்து 4 போதைப்பொருள் மாத்திரைகள், ஒரு தங்க நெக்லஸ், 03 தங்க மோதிரங்கள் மற்றும் ஒரு தங்க வளையலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments