சேர்பியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!


சேர்பியாவின் தலைநகரில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளிக் காவலாளி உட்பட 8 குழந்தைகளுமாக 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 குழந்தைகள் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவ சிறுவனை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். அச்சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினர். பள்ளி வளாகத்தில் வைத்து அச்சிறுவுன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

விளாடிஸ்லாவ் ரிப்னிகர் ஆரம்பப் பள்ளியில் காலை 8:40 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

No comments