இராணுவப்பயிற்சி மையத்தில் டெங்கு?



பூநகரியின் அரசபுரம் இராணுவப்பயிற்சி மையத்தில் டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட டெங்கு பரவல் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில், இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில், இன்று பகல் 11.30 மணிக்கு, வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில், விடயங்கள் ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கிராம மட்டங்களிலும் குழுக்களை நியமித்து, அவற்றின் மூலம் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேநேரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் உள்ளடக்குமாறு, செயலாளரால் பணிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கலந்துரையாடலில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப் பள்ளி, பூநகரி ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்தியர், பொலிஸார், இராணுவத்தினர், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் செயலாளர், பொதுச் சுகாதார பரிசோதரர்கள் என பலர் பங்கேற்றனர்

No comments