யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா!



யாழ்ப்பாணத்தில் நீண்ட கால இடைவெளியின் பின்னராக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்ட பெண் ஒருவர் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டார்.

பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றுப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும் அவர் கூறினார். இப்பெண் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே தொற்றுக்குள்ளாகின்றனர் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் விடுதிகள் தற்போது இல்லை. தொற்று உச்சத்தில் இருந்த போது அமைக்கப்பட்ட விடுதிகள் தொற்று நோய் குறைந்த பின்னர் அகற்றப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட நோயாளி சாதாரண விடுதி ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments