சாமர குணசேகர யார்?



எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைளை தடுப்பதற்காக  250 மில்லியன் டொலரை இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கான  நஸ்டஈடு தொடர்பில் துறைசார் நிபுணர்கள்   இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாதிரிகளுக்கு அமைய கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு  6.4 பில்லியன் டொலர்  நஸ்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிக்கையில்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது அதனை கையண்ட முகவர் விபரங்கள் வெளியாகியுள்ளது.


No comments