25ம் திகதி மீண்டும் பேய் வருகிறதாம்!



பயங்கரவாத எதிர்ப்பு புதிய  சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், பல தரப்பினரும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.படுகாயமடைந்த பொதுமகன் யாழ் போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவாலி, மானிப்பாயை சேர்ந்த செல்வ மகேந்திரன் கமலரூபன் (வயது-36) என்பவரே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

புயணித்த காரினை காவல்துறை முழங்காவில் பகுதியில் சோதனை நடவடிக்கைக்காக வழிமறித்துள்ளதாக தெரியவருகின்றது.எனினும் வாகனம் நிறுத்தப்படாது பயணித்தவேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது




No comments