கொக்கிளாய் பகுதியில் வெடிமருந்துடன் ஒருவர் கைது!


வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புல்மோட்டை - கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 14 டெட்டனேட்டர்கள், 4 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 15 அடி நீள சேவா நூல் ஆகியவையும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments