இலங்கை குரங்குகள் :ஓய்ந்தபாடாகவில்லை



இலங்கையில் இருந்து குரங்குகளை கேட்கவில்லை என  சீன தூதரகம் தெரிவித்த நிலையில்  விவசாய அமைச்சின் செயலாளர்  குணதாச சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

சீன குடியரசில் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் அது தனியார் நிறுவனத்திடம் இருந்து வந்ததாக கூறியுள்ளார். இதில், சீனாவில் மிருகக்காட்சிசாலைகளுக்கு இனப்பெருக்க மையங்களை நடத்தும் தனியார் நிறுவனத்திடம் இருந்து இந்த கோரிக்கை வந்துள்ளது. 

குறித்த கோரிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அமைச்சிடம் உள்ளதாகவும், சீன மிருகக்காட்சிசாலைக்கு இனப்பெருக்க நோக்கங்களுக்காக ஒரு தொகை விலங்குகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments