யாழில்.முகமூடி வன்முறை கும்பல் வீட்டிற்கு சேதம் விளைவிப்பு




யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் இரவு வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06க்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் , கதவுகள் , வீட்டில் இருந்த உடைமைகள் என்பவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை மறைத்து முகமூடிகளை அணிந்து இருந்ததாகவும் , தாக்குதலினால் 02 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments