35 பேருக்கு தங்கமுலாம் பூசிய ஐபோன்களை வழங்கினார் மெஸ்ஸி


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக மெஸ்ஸி வழங்கியுள்ளார்.

2022-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போது, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றதன் நினைவாக வீரரின் பெயர், ஜெர்ஸி எண், அணியின் லோகோ ஆகியவை பொறிக்கப்பட்ட பரிசை அளித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


No comments