ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில் ?


ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments