அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபா மேலும் உயர்கிறது


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் இன்று காணப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.

தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாவின் மதிப்பு உயர்வடைகிறது.ரூபாவின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments