குடும்பஸ்தரை தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற மூன்று சிறுவர்கள்!


 சிறுவர்கள் குழு ஒன்று குடும்பஸ்தர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

 வெலிபென்ன பிரதேசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதியொன்றில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்கிரமடைந்ததை அடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். 

கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய 3 சிறுவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வெலிபன்ன கல்மத்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ரங்கவிராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

No comments