உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!


உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த உணவு பொருட்களின் விலைகள் 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments