உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு யோசனை


உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளைய தினம் வியாழக்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்றைய தினம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments