13:ரணிலிடமும் அதுவே உள்ளதாம்!

 


13 வது  திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி  தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்  தெரிவித்தார் .இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதற்காக  அதை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது  குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன் அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13 வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்ததுதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில் அந்த காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது  என்பதன் உண்மை தன்மை யைகண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் என தெரிவித்தார்.

No comments