பிறந்து ஓரிரு நாட்களேயான குழந்தை சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

மருதங்கேணி பொலிஸாருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் 34 வயதான பெண்ணொருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

பிறந்து ஓரிரு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம்  மருதங்கேணி பொலிஸார் மேலதிக  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments