யாழ் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம்!



நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இன்று(05) காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த தீயணைப்பு வாகனம் யாழ் வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைக்கு இணங்க நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ் மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படைவாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

No comments