ஒரே தடவையில் நான்கு குழந்தைகள்


புத்தளம் வைத்தியசாலையில்  முதல் தடவையாக  24 வயதான இளம் தாய் ஒருவருக்கு  ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.  

பிறந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையொன்றும், மூன்று பெண் குழந்தைகளும் அடங்குவதாக வைத்தியசாலை பணிப்பாளர்  சுமித் அன்டன் பெர்ணான்டோ  குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் உள்ளன.

No comments