இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம்!



இலங்கையில் எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உலகம் கோரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்று நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நிலையான அரசாங்கம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நிரந்தரமாக செயல்படும். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தேர்தல் நடத்தப்படும்,” என்றார்.

ஏனெனில், அரசாங்கம் ஸ்திரமாக இல்லாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. இப்போது அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என்று அமைச்சர் கூறினார்.

No comments