ஜனாதிபதித் தேர்வு: சஜித் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சந்தித்துப் பேச்சு!


சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளும்கும இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இன்று திங்கட்கிழமை (18) குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன் புதிய ஜனாதிபதித் தேர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குறிப்பாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது,  போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments