முன்னாள் யப்பான் பிரதமர் மீது சூடு!

ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. 

முதற்கட்டத் தகவலின்படி அபேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. 67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் பாராளுமன்ற மேலவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments