வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது


வெளிநாட்டுக்கு கடல் வழியாக தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய மீன்பிடி இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கடத்தல்காரர்கள் 06 பேர் உட்பட 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 05 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

No comments