அச்சுவேலியில் போராட்டம்!


விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள்  கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 

அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

No comments