மீண்டும் கோத்தபாயவின் வெள்ளைவான்கள்!



கோத்தபாயவின் வெள்ளைவான்கள் மீண்டும் தென்னிலங்கையில் உலாவரத்தொடங்கியுள்ளன.

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றும் நேற்று முன்தினமும் மீன்பிடி கப்பல் உரிமையாளர் மற்றும் மீனவர் ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வேனில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மகன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக காணாமல் போன மற்றையவரின் தாய் தெரிவித்துள்ளார்.

No comments