சாணக்கியனிற்கு கஸ்டகாலம்!


எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.சகட்டுமேனிக்கு நாடாளுமன்றில் பேசி ஊடகங்களது பார்வையினை பெறுகின்ற நிலையிலியேலேயே சாணக்கியனிற்கு  ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இரண்டு புதிய அமைச்சுப் பதவிகளும், அவற்றுக்கான விடயப்பரப்புகளும் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அமைச்சுக்களுக்கு புதிதாக இரு அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் தம்மிக்க பெரேரா, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments