திருகோணமலையில் பதுங்கினார் மகிந்த: ஒப்புக்கொண்டார் பாதுகாப்புச் செயலாளர்


பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைதளதில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் அவர் தங்கியிருந்த வேளையில், அதனை 1000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் சுற்றிவளைத்திருந்தனர்.

அவரது பாதுகாப்புக்கு அங்கு அச்சுறுத்தல் நிலவியதால், அவர் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை சீரான பின் அவர் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு தலைவராக இருப்பினும் சரி சாதாரண குடிமகனாக இருப்பினும் சரி அனைவரையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments