அகதிகளை ஏற்றியதாக ஓட்டிகளிற்கு சிறை!



திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்து, பலாலி   கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேரில் பலாலியை சேர்ந்த இரண்டு படகோட்டிகளையும்  விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் ஏனைய 11 பேரையும் பிணையில் விடுத்துள்ளார். 

திருகோணமலை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் படகோட்டிகளான பலாலி அண்ரனிபுரம பகுதியைச் சேர்ந்த ஓட்டி களான 2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர் , யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் , ஏனைய 11 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த   மல்லாகம் நீதவான் 12ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்து கட்டளையிட்டார். 

No comments