இந்தியா இலங்கையை விலைக்கு வாங்கலாம்?



இலங்கையை அமெரிக்க,  சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது. 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது  என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்தியா வழங்கும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நாட்டிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால்,  இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக்கூடிய நிலைமை ஏற்படலாமென நாட்டில் ஏற்படப்போகும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க தவறினால், மக்கள் வீதிக்கு இறக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.


நாட்டின் ஆட்சியாளர்களுக்கு நாடு வங்குரோத்தடைந்துள்ளமை தெரியவில்லை. நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கான பொருட்கள் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றன. இதனால் நாட்டில் பாரிய உணவுப் பஞ்சம் ஏற்படப்போகிறது

No comments