மகிந்த படையணி:24பேர் கைது!



காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனிடையே சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை,  கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால், பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது வன்முறைகைளை கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments