மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும்!



கோத்தபாய அரசு கொண்டுவரவுள்ள  பயங்கரவாத தடுப்பு  (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறை​வேற்றப்பட வேண்டுமென அந்த வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர், சபாநாயகர் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை விடுத்தார்.

No comments