காணாமல் போகும் பிள்ளையார்கள்!



யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்தும் பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது. குறித்த ஆலயத்தின் வளாகத்தினுள் விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அந்நிலையில் , தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு அருகில் உள்ள ஆலயத்தினுள் இருந்த இரண்டு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளன. அதேவேளை பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்த பிள்ளையார் சிலையும் காணாமல் போயுள்ளது.  

பிள்ளையார் சிலைகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

No comments