நல்லூர் கந்தனை காண பொலிஸ் பேருந்து தடையாம்!









நூறுபேருடன் நல்லூர் என ஆரம்பித்துள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் முதல்நாளே குழப்பத்துடன் முடிந்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களையே ஆலயத்தினுள் அனுமதிப்பதாக அறிவித்திருந்த நிலையில் வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிகையிலானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் கலகமடக்கும்  பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.


No comments