வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தர் கொலை!



குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த  சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


No comments