பலாலியில் இந்திய அமைதிப்படைக்கு அஞ்சலி!



யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியாவின்           75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமை போலவே பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான அஞ்சலியுடன் நடந்துள்ளது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்” எனும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின்  75-வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்; யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு  ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தில் நடந்த தேசியக் கொடியேற்றல் நிகழ்வில் துணைத்தூதுவர் அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். 


No comments