கோப்பாய் விபத்தில் உயிரிழந்தவர் தமிழ் காவல்துறையின் மனைவி!!



இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த இளம் குடும்ப பெண் ; உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த வேளை,  பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை முந்தி செல்ல முற்பட போது , மோட்டார் சைக்கிளுடன்  மோதி  விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பின் இருக்கையில் இருந்த பெண் டிப்பர் பக்கம் விழுந்தமையால் டிப்பரின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். பெண்ணின் கணவன் மற்றைய பக்கம் விழுந்ததால் , சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் கணவர் இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த தமிழ் காவல்துறையினரென தெரியவந்துள்ளது.




No comments