12 - 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி - பிரித்தானியா அனுமதி


இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர், சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


No comments