பாணும் போச்சு!



இலங்கையில் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் பிரகாரம் இலங்கையில் ஒரு இறாத்தல் பாணிணின் விலை 75ரூபாவாக அதிகரிக்கும்

செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 தொடக்கம் 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.


No comments