பிழைபிடிக்க வேண்டாம்:இலங்கை ஜனாதிபதி!


நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தவேண்டாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் கோத்தபாய.

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணியல்ல, உண்மையற்ற (பொய்) செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்துலக ஊடகச் சுதந்திர நாளான இன்று; தெரிவித்துள்ளார்.

இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயல்படுவதே ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும்.

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி, ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்துக்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்.

அவையே, ஊடகச் சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

எமது நாட்டில் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளதாகவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.


No comments