யாழ்ப்பாணம் தயாராம்!



வடமாகாணத்தில்  Covid-19  நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள்யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

 தீவிரமாக பரவி வரும்கொரோனா  தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ,அதி தீவிர சிகிச்சை , ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு  சிகிச்சை வழங்கமற்றும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு விசேட சிகிச்சை வழங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் கொரோனா சிகிச்சைக்கு என தயார் படுத்தப்பட்டுள்ளன.


No comments