53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்!


இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (96 கி.மீ) தொலைவில் 53 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட நீர் மூழ்கிக்கப்பல் தொடர்புகள் அற்ற நிலையில் காணாமல் போயுள்ளது. 

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு நாடுகளிடம் கோரிக்கைகள் விடுத்துள்ளன.

எனினும் இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்துள்ளதாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments