இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாகும் ஆர்எஸ்எஸ் இயக்கம், ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை !


இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி, இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர், நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை புரிந்தது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு, இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், நாக்பூருக்கு சென்று வந்தார். இந்நிலையில்தான், ஜெர்மனி & பிரான்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்தியாவின் சமகால நிலை குறித்து தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் கூறியுள்ளதாவது; ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆரம்பகால தலைவர்கள், ஹிட்லர் மற்றும் முசோலினியை ஆதரித்தவர்கள். இந்தியா ஒரு தீவிர இந்துத்துவ நாடு என்ற நிலையை நோக்கி நகர்வதில், ஆர்எஸ்எஸ் தனது தீவிர பங்கை ஆற்றுகிறது. இந்தியாவில் தற்போது மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படையான விஷயங்கள் மறுக்கப்படுகின்றன.

பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது. இவற்றுக்கான குரல் கொடுக்கும் பிரபலங்கள், சட்டவிரோதமான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள் மற்றும் கொல்லப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளால், அனைவருமே மிரட்டப்படுகிறார்கள். தேசியப் பாதுகாப்பு மற்றும் தேசவிரோதம் என்ற பெயரில், மனித உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன.

ஆர்எஸ்எஸ் இயக்கம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட வேறு நாடுகளிலும், தனக்கான சொத்துக்களை கொண்டு, தனது அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த இயக்கத்தின் தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவான பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, வீரியமாக களமாடுகிறார்கள். இந்தவகையில் பார்க்கையில், பாஜக இல்லாமல், ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் இயங்க முடியும். ஆனால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் துணையின்றி, பாஜகவால் இயங்க முடியாது என்ற முடிவிற்கே வர முடிகிறது.

பாஜக, அதிகாரத்தில் இருக்கும்வரை, ஆர்எஸ்எஸ் இயக்கம் வலிமைப்பட்டுக்கொண்டே செல்லும். எதிர்காலத்தில், ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு, வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரிக்கும் அதேநேரம், அந்த வலதுசாரி ராணுவ இயக்கம் தொடர்பான அறிமுகமும் புரிதலும், அதுகுறித்து கருத்துகளும் அதிகரிக்கும் என்றுள்ளனர் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

No comments