உள்வர வெளிவிவகார அமைச்சு அனுமதி தேவையில்லை!



வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லை என இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகை தருவோரை வடிகட்டவென உருவாக்கப்பட்ட நடைமுறையே தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.


No comments