ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொலை வழக்கு! காவல்துறை அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு!!


அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவி குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜோர்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னா காவல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை விசாரிக்கும் 12  நீதிபதிகள் அடங்கிய குழுவினர், ஃப்ளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டனர். பின்னர் 45 சாட்சியங்களிடம் வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஃப்ளாயிட் வழக்கில் டெரிக் சாவி குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து டெரிக்கின் ஜாமீனையும் நீதிபதிகள் இரத்து செய்தனர். ஜோர்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை கடந்த ஆண்டு டெரிக் உள்ளிட்ட சில காவல்துறையினர் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

No comments