செல்வத்திடமும் வாக்குமூலம் பதிவு


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உற்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments