ராமர் பாலம் சென்று திரும்பிய இந்திய குழு!



தமிழக- தமிழீழ எல்லைகளை பிரிக்கும் தமிழர் கடலில் அமைந்துள்ள ராமர் பாலப்பகுதிக்கு சென்று திரும்பியுள்ளனர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள்.

தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பிப்ரவரி நேற்றைய திம் தலைமன்னாரில் உள்ள ராமர்பாலத்திற்கு  குறிக்கட்டுவன் துறைமுகத்திலிருந்து 'சபையர்' என்ற படகில்; பயணத்தை மேற்கொண்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட பயணத்தில் சமுத்திர தாய்க்கும் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.



இதனிடையே புனித யாத்திரைக்கு உதவியதற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய துணை தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.


No comments