சிவயோகனிடமும் விசாரணையாம்!


 மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் சிவயோகநாதனிடம் 2 பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் மட்டக்களப்பு திராய்மடுவில் உளள அவருடைய வீட்டுக்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

கிழக்கில் மட்டக்களப்பு, திருக்கோயில் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து வருகைதந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் .சிவயோகநாதனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா,பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா,கொரனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

முற்பகல் 11.மணி தொடக்கம்  1மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

No comments