ஈபிடிபி:தோய்த்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

 

ஈபிடிபியின் யோகேஸ்வரிக்கு கோத்தபாய பதவியொன்றை கொடுத்துவிட மூடப்பட்டு கிடந்த ஈபிடிபி கோவைகளை தூசு தட்ட தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை முதல் சக்தி தேவா கொலை வரை நீண்ட கொலை பட்டியல்கள் இதனுள் அடங்காத போதும் டக்ளஸின் பழைய பட்டியல் நினைவுகூரப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட  மகிந்த ராஜபக்சே நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமர்வுகளின் போது பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்  வழங்கிய சில வாக்குமூலங்கள் , 

1. திருமதி முத்துலிங்கம் கொலஸரிக்கா என்பவர் அளித்த வாக்குமூலத்தில் "எனது மகன் முத்துலிங்கம் மலரவன்  அவர்களை  2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில்   ஈச்சமோட்டை பகுதியில் உள்ள எனது  வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிவில் உடை தரித்த ஏழு பேர்  வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். அவர்களில்  மூன்று பேரை  அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்" என சொல்லியிருந்தார் 

2. திருமதி இராசேந்திரம் துளசிமலர் என்பவர் அளித்த வாக்குமூலத்தில்  " 2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள்" என உறுதிப்படுத்தி இருந்தார் 

3. திரு செல்லையா சுப்பிரமணியம் என்பவர் அளித்த வாக்குமூலத்தில்  "ஈ.பி.டி.பி யினர்  செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக தனது மகன் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்களை  2007ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பருத்தித்துறை கொடிகாமம் சந்தியில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்து ஈ.பி.டி.பி யினரிடம் ஒப்படைத்து இருந்த நிலையில் காணமல் போய் விட்டதாக சொல்லி இருந்தார் 

4. திருமதி சுந்தராஜ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் "மனித உரினம மற்றும் அபிரிவிருத்திக்கான மையத்தில் திட்ட மேலாளராக இருந்த சின்னவன் சுந்தரராஜ் என்பவர்  பெண்கள் மற்றும் சிறுவர்களை விபச்சாரத்திற்கு கடத்தும் வலையமைப்பு ஒன்றுடன்  ஈ பி டி பி க்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தி  இருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி  ஈ.பி.டி.பி யி னாரால் கடத்தப்பட்டதாக  சொல்லி இருந்தார் 

5. திருமதி வனிதாஸ் ரதிதேவி என்பவர்  சாட்சியமளிக்கையில், 2007ம் ஆண்டு 9ம் மாதம் 5ம் திகதி நள்ளிரவு வீட்டிலிருந்த என் கணவன் வனிதாஸ் அவர்களை    ஈ பி டி பி யுடன் வந்த  படையினர் விசாரணைக்கென பிடித்து  சென்றார்கள். இந்த கடத்தல் குழுவில் இருந்த மகேஸ், தீபன்  இருவரையும் எங்கள் பகுதிகளில் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம் என சொல்லி இருந்தார் 

6. தந்தை  ஒருவர்  அளித்த சாட்சியில்  2006.10.25 அன்று மகன் வீட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது நல்லூர் அரசடி இராணுவ முகாமில் பகுதியில் வைத்து  ஈ பி டி பி யுடன் சேர்ந்து  படையினர்  சோதனை செய்தனர் அதன் போது இருவர் என் மகனை பிடித்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் பச்சை நிற பிக்கப்பில் எனது மகனை ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர்  என கதறினார் 

7. பெயரை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் சிவில் உடையணிந்த இராணுவத்தினரும், ஈ.பி.டி.பி ஆட்களும் தன்னுடைய கணவரையும் அவரின் இரு சகோதரர்களையும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தியதாகவும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார் 

8. திருமதி லோகேஸ்வரன் என்பவர் அளித்த சாட்சியில், வேலணை ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த  சதாசிவம் லோகேஸ்வரன் எனும் தனது மகன்  2012 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி  நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஈ.பி.டி.பி யின் ராம் தோழர் அடங்கிய குழுவினாரால் கடத்தப்பட்டதாக சொல்லியிருந்தார் 

9. திருமதி குருநாதன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் , குருநாதன் கேசவன் எனும் பெயருடைய தனது  மகன்   நெல்லியடியில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று வீடு திரும்பும் வழியில்,. 2008 டிசெம்பர் மாதம் இருபதாம் திகதி அன்று இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டார் எனவும் பணம் தந்தால் கடத்தப்பட்ட மகனை மீட்டுத் தருவதாக சொன்ன ஈ.பி.டி.பி யின் நெல்லியடி பொறுப்பாளராக இருந்த சுதன் மற்றும் அவரோடு இருந்த வாணி  அவர்கள் சொல்வதனை நம்பி ஒரு இலட்சத்து அறுபத்தி ஐயாயியம் ரூபா பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் சொல்லி இருந்தார் 

10. திருமதி க.தர்மநாதன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில்  தனது  கணவர் தர்மநாதன்  2006ம் ஆண்டு ஆவணி  மாதம் 8 ம் திகதி தனது வாகனத்துடன் கடத்தப்பட்டார் என்றும் அவருடய வாகனம் வடமராட்சி கிழக்கு பகுதியில் ஈ.பி.டி.பி யினர் தங்கி இருந்த மணற்காடு  படைமுகாம் பகுதியில்   கடத்தப்பட்ட அன்று காணப்படட்டதாகவும் பின்னர் தனது  கணவருடைய வாகனம் மண்டான் படைமுகாமில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லி இருந்தார் 

 இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பாக  இலங்கை அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட ரீதியாக நடத்திய அமர்வுகளில் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான கண்ணீர் வாக்குமூலங்களுக்கு இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை 

குறைந்த பட்சம் வாக்குமூலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  மீது ஒரு விசாரணை கூட இதுவரை  நடத்தப்படவில்லை 

ஆனால் இதே போல ஆயிரக்கணக்கான கடத்தல்கள் , கொலைகள் , கற்பழிப்புகள் , விபச்சார வலையமைப்பு  , மணல் கொள்ளை என  கொடூரங்களை புரிந்த டக்ளஸ் தேவானந்தா கும்பலை சேர்ந்த  திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா எனும் ஊழல் பெருச்சாளியை கோட்டபாய ராஜபக்சே தனது மனித உரிமைகள் தொடர்ப்பன புதிய ஆணைக்குழுவில் தமிழ் உறுப்பினராக நியமித்து இருக்கிறார் 

இலங்கை    ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எப்போதும் நீதி செய்ய மாட்டார்கள்  என்பதற்கும் இலங்கை நீதி நிருவாக கட்டமைப்பிற்குள் தமிழர்களுக்கு என்றைக்கும் நீதி கிடைக்காது என்பதற்கும்  திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின்  நியமனம் மேலும் ஒரு சாட்சியாக அமைந்து இருக்கிறது 

மறுபுறம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நீதி நிருவாக கட்டமைப்புக்குள்  தீர்வைக் காணுவதற்கான வாய்ப்புக்கள் இருகின்றது என தொடர்சியாக அரசியல் பேசும் கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பேசி வருகின்றார்கள் 

இவர்களுக்கும் பதவிகளுக்காக ஈ.பி.டி.பி கும்பலை புனிதப்படுத்தும் வேலைகளை செய்யும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளுக்கும் எந்த  வித்தியாசமும் இல்லை


No comments