முஸ்லிம் உடலங்கள் தகனம் செய்வதை எதிர்த்துப் போராட்டம்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (12) பொரளை மயான நுழைவாயிலில் வெள்ளைத் துணிகளைக்கட்டி, தனது எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரான அலி ஷாஹிர் மௌலானா தனது முகப்புத்தகத்தில்,

“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளேன். பிறந்து வெறும் 20 நாட்களேயான பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரின் உடல்கள் இங்குதான் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன.

ஆகவேதான், நான் எனது முழு எதிர்ப்பையும் இந்த பொரளை மயானக் கதவில் வெள்ளைத் துணியைக் கட்டி வெளியிட்டுள்ளேன். எத்தனை முறை கோரிக்கைகள் முன்வைத்தாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக இந்த மயான கதவினில் இந்த வெள்ளைத்துணிகள் தொங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments