தடையா?:கிடப்பில் போட்டது இலங்கை அரசு!



சமூகவலைத்தள பாவனையாளர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிற்போட்டுள்ளது.வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறதென பல்டியடித்துள்ளார் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. 

சமூகவலைத்தள பாவனையாளர்களை பதிவு செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை. வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான தனது கருத்துக்கள் சில தரப்பினரால் திரிபுபடுத்தப்பட்டு பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது.

அத்துடன், இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கோத்தா ஆட்சி பீடமேற சமூக ஊடகங்கள் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments